தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து முழுமையாக மக்கள் அறிந்து கொண்டு, அதன் பயனை முழுமையாக அடைய துணை புரியும் வகையில் தமிழக அரசு வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. அதற்கு " TNDIPR, Govt. of Tamil Nadu" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் அதில் வெளியிடப்படும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சமூக வலைதள பக்கங்களைக் காண முடியும் என தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது