ஜாக்டோ ஜியோ அமைப்பு வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று
ஏ.வ வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதற்கு ஜாக்டோ ஜியோவில் இருந்து உயர் மட்டக் குழுவின் 30 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலமாக கால வரையற்ற போராட்ட அறிவிப்பு திரும்ப பெறப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.