தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று காலை டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ரவி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். இது குறித்து தமிழக கவர்னர் கூறுகையில், தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.