தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கான நல்ல ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்ட ஆட்சியர் தம்புராஜுக்கு இவர் நாகை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த பொழுது ஆற்றிய பணிகளுக்காகவும், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணி ராஜனுக்கு ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காகவும், கோவை எஸ். பி. பத்ரிநாராயணனுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் நல் ஆளுமை விருது வழங்கப்பட இருக்கிறது. அதே போல் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலி, மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணித்ததற்காக நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.
இவை நாளை சுதந்திர தினத்தில் ரூபாய் 2 லட்சம் பரிசு தொகையுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மூலம் வழங்கப்பட இருக்கிறது.