தமிழக அரசு குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை 2,540 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, கடந்த ஜூன் மாதத்தில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான 2,327 காலியிடங்களை அறிவித்தது. இப்போது, அந்த எண்ணிக்கையில் 213 கூடுதல் காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்தம் 2,540 காலியிடங்கள் உருவாகியுள்ளது. இதற்கு 7,90,376 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். செப்டம்பர் 14-ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்றது, இதில் 5,81,305 பேர் தேர்வில் பங்கேற்றனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு 2025 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.