மத்திய சுகாதாரத்துறையினருடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் காணொலியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மற்றும் இன்புளூயன்சா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. டெல்லியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெறும் இந்த காணொலி ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உள்பட மருத்துவ துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மாநிலத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் மற்றும் அதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கி கூறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.