தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஆவடி மாநகராட்சி ஆணையர் சேக் அப்துல்லா ரஹ்மான் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டிஆர்ஓ துர்கா மூர்த்தி வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றம் பெற்றுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று தமிழ்நாடு கைவினை பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குனர், திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளனர்.