50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தமிழக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

October 13, 2022

மன்னார்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையில், அந்த 3 சிலைகளும் […]

மன்னார்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையில், அந்த 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர். இதனால் புதுச்சேரியில் உள்ள பிரென்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி நிறுவனத்தில் திருடப்பட்ட சிலைகளின் படங்களை பெற்ற பிறகு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களின் வலைதளங்களில் கிடைக்கப்பட்ட படங்களுடன் ஒத்த சிலைகளை தேட ஆரம்பித்தனர்.

இந்த தேடுதலின் பலனாக அமெரிக்காவின் கன்சாஸ்சிட்டி, மிசோரி, நெல்சன் அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் கோயிலில் காணாமல் போன யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரண்டு சிலைகளையும் அமெரிக்காவில் இருந்து மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu