கேலோ இந்தியர் இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
சென்னை,கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் ஆறாவது கேலோ இந்தியர் இளைஞர் விளையாட்டு போட்டி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 5500 க்கும் மேற்பட்ட வீரர்கள் 26 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இதன் ஐந்தாவது நாளான நேற்று தடகளம், சைக்கிளிங், ஸ்குவாஸ் ஆகிய போட்டிகளில் தமிழகம் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று வருகிறது. நேற்றைய போட்டியில் முடிவில் தமிழகம் 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என 31 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.