தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

February 23, 2024

தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த பன்னிரண்டாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரையாற்றினார். அதனை தொடர்ந்து 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 20 ஆம் தேதி […]

தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த பன்னிரண்டாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான உரையாற்றினார். அதனை தொடர்ந்து 19ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பட்ஜெட்கள் மீதான விவாதம் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதி நாளான நேற்று அமைச்சர்கள் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பின்னர் பேரவையை ஒத்திவைப்பதற்காக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu