பிரான்சில் நடைபெற உள்ள 33 வது ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் தகுதி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 33 வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் ஒலிம்பிக் தொடர்பான ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னதாக உலகத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது