இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில், பசுமை சூழல் பாதுகாப்புக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம், காலநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளுக்கு பணம் கொடுக்கப்படும். பசுமை திட்டங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை அமைப்பு, இதற்கான நிதியை ஒழுங்குமுறை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழக அரசு 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான பொருட்கள் தயாரிப்பு, மாசு கட்டுப்பாடுகளுக்கான தொழில்நுட்ப கட்டமைப்பு, புத்தாக்க எரிசக்தி பயன்பாடு, கார்பன் உமிழ்வை குறைக்கும் தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள், காடு வளர்ப்பு, மின்சார வாகன திட்டங்கள், குப்பை மேலாண்மை போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.