தமிழக அரசு விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களை ஸ்பேஸ் பே ஆக உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2024 என்பது விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குலசேகரபட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களை ஊக்குவித்து வளர்ச்சியை விரைவு படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. விண்வெளி துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கொள்கையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வலுவான தொழில் துறை உள் கட்டமைப்பு ,தொழில்நுட்ப நிறுவனத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு இந்த கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது