உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில மகளிர் கொள்கைக்கான வரைவு கொள்கை கடந்த 2021-ம்ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு கருத்து கோரப்பட்டது. பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் தற்போது முழுமையான கொள்கை வெளியிடப்பட உள்ளது. இந்த கொள்கையை மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். மாநில மகளிர் கொள்கையில் மகளிர் மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.