இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தமிழகத்தில் ஐந்து சுங்க சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மணகெதி, கல்லக்குடி,வல்லம், இனம் கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஒருமுறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.