தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்களின் சார்பில் கேப்ஸ் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆயிரக்கணக்கானோர் காலமுறை ஊதியம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக 40 ஆண்டுகளுக்கு மேலாக நான்காயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும், கிராம ஊராட்சிகளில் ரூபாய் 250 மாத ஊதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கும் கால ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் காலை கிண்டி, சைதாப்பேட்டை, சர்தார் படேல் ரோடு, வேளச்சேரி ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.