இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தலிபான் அரசின் தலைவர் ஹிபெதுல்லா அக்ஹண்டாஸ்டா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த யாரையும் அனுமதிக்கமாட்டோம். இந்த உறுதிமொழியை ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டினருக்கும், உலகத்திற்கும் நாங்கள் அளிக்கிறோம் என்று ௯றினார்.
அதே நேரத்தில் தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்று எதிர்பார்ப்பதாகவும் ௯றினார். மேலும் பரஸ்பர தொடர்பு தூதரகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உள்பட உலக நாடுகளுடன் நல்ல முறையில் தொடர விரும்புவதாகவும் ௯றினார்.
மேலும் இங்கு குழந்தைகளுக்கான மத மற்றும் நவீன படிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
என்று அவர் கூறினார்.