பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை

August 9, 2023

பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்பது நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படும். திருவிழாவிற்காக ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து கோவில் அருகே குடில் அடைத்து பொதுமக்கள் தங்கும் வழக்கம் உள்ளது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடக்க இருக்கிறது.இது தொடர்பான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த மாதம் 13, 14ம் தேதிகளில் கோவில் பராமரிப்பு, […]

பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்பது நாட்கள் தடை விதிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படும். திருவிழாவிற்காக ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து கோவில் அருகே குடில் அடைத்து பொதுமக்கள் தங்கும் வழக்கம் உள்ளது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடக்க இருக்கிறது.இது தொடர்பான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
இந்த மாதம் 13, 14ம் தேதிகளில் கோவில் பராமரிப்பு, வனப்பகுதிகளில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மனித, வனவிலங்கு மோதலை தடுக்கும் விதமாகவும் சரணாலயம் சுத்தம் செய்யும் பணிக்காகவும் பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி மூடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை 9 நாட்கள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu