தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு, சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை, வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் துறை, அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.