பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதனின் பெயர் தஞ்சை வேளாண் கல்லூரிக்கு சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு வேளாண் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டு இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எம்.எஸ் சுவாமிநாதனின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகள் அனைத்தும் இணைந்திருக்கின்றன.
பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் கடந்த 28.9.2023 மறைவடைந்தாட். அவரது நினைவை போற்றும் வண்ணத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும். அதேபோல் இளம் வேளாண் அறிவியலில் பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் முன்னிலை பெரும் மாணவர்களுக்கு எம்.எஸ் சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும் என்பதை முதலமைச்சரின் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.