தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இந்த அறிவிப்பை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.
இதில் சென்னை மாவட்ட கலெக்டராக ராஷ்மி சித்தார்த்த சகடே, நீலகிரி மாவட்ட கலெக்டராக எம்.அருணா, வரலாற்று ஆவண காப்பாக ஆணையராக நந்தகோபால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைப்போல் நில நிர்வாக துறை இணை ஆணையராக அம்ரித், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக ஹனீஷ்சாப்ரா, தமிழ்நாடு ஊரக மேம்ப மேம்பாட்டு திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா விஜயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சித்ரா விஜயன் தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு பாதுகாப்பு திட்ட இயக்குனராகவும் செயல்பட இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.