ஜூலை மாதம், ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தின. இந்த கட்டண உயர்வு, வாடிக்கையாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஜியோ நிறுவனம் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 7.96 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதேபோல், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களும் சந்தாதாரர்களை இழந்துள்ளன.
மறுபுறம், BSNL நிறுவனம் தனது கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதால், புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8.4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், BSNL 2025 ஆம் ஆண்டுக்குள் 4G சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் மொபைல் தொலைத்தொடர்பு துறையில் பெரும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த மாற்றங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.