சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்படும் என அவர் கூறினார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 23,629 ஊழியர்கள், அதாவது 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது, இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 2,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு 2025 முதல் மாதந்தோறும் வழங்கப்படும், இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவு ஏற்பட உள்ளது.