ஏப்ரல் 26, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட 2,200 கோடி வருவாய் அதிகரித்துள்ளது.2020-2021 ஆம் ஆண்டில் 33,811 கோடி வருவாய் வசூல் ஆனது. ஆனால் 2021-2022 ஆம் ஆண்டில் 36,013 கோடி வருவாய் அதிகரித்துள்ளது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால்16.67 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் மேற்பார்வையாளர்கள் பணியாளர்கள் , மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் 500 ரூபாய் சம்பள உயர்வு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.