டாடா-ஏர்பஸ் திட்டம்: இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உள்ளது - மாருதி சுசூகி தலைவர் கருத்து

November 1, 2022

டாடா-ஏர்பஸ் விமான திட்டம் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உள்ளது என மாருதி சுசூகி தலைவர் ஹிசாஷி டேகுச்சி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத்தின் வதோதராவில் சி-295 போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அக்டோபர் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் இந்த மாபெரும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து செய்துள்ளன. இந்த டாடா ஏர்பஸ் விமான திட்டம் குறித்து மாருதி சுசுகி எம்.டி. […]

டாடா-ஏர்பஸ் விமான திட்டம் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உள்ளது என மாருதி சுசூகி தலைவர் ஹிசாஷி டேகுச்சி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் சி-295 போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அக்டோபர் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் இந்த மாபெரும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து செய்துள்ளன.

இந்த டாடா ஏர்பஸ் விமான திட்டம் குறித்து மாருதி சுசுகி எம்.டி. ஹிசாஷி டேகுச்சி கூறுகையில், 'இந்தியா வளர்ந்து வரும் சந்தை. இங்கு மிகப்பெரிய வணிக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு இது ஒரு நல்ல சந்தையாகும். நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவது புத்திசாலித்தனமான முடிவு என்றார்.

மேலும் அவர் சுசுகி நிறுவனம் குஜராத் மற்றும் ஹரியானாவில் அவர்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தியதோடு புதிய தொழிற்சாலையை கட்டத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். குஜராத்தில் நடைபெறவுள்ள மற்ற திட்டமான புல்லட் ரயில் குறித்து கருத்து தெரிவித்த டேகுச்சி, இது ஒரு முக்கியமான திட்டம் என்றும், ஜப்பான் அதற்கு வலுவாக ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.

முன்னதாக, இந்திய விமானப் படைக்கான சி-295 போக்குவரத்து விமானங்கள் டாடா-ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. வதோதராவில் உள்ள இந்த ஆலை, 40 விமானங்களை தயாரிப்பதோடு, விமானப்படை தேவைகள் மற்றும் ஏற்றுமதிக்கு கூடுதல் விமானங்களை தயாரிக்கும் எனப்பிரு கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான ஏர்பஸ் மற்றும் டாடா குழுமத்தின் கூட்டமைப்பு இந்திய விமானப்படைக்கு (IAF) C-295 போக்குவரத்து விமானங்களை ₹22,000 கோடி திட்டத்துடன் வதோதராவில் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu