டாடா குழுமம் பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட நீர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா குழுமம் அதன் வணிகத்தை டாடா நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (TCPL) இன் கீழ் கொண்டுள்ளது. இது ஹிமாலயன் என்ற பிராண்டின் பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் டாடா காப்பர் பிளஸ் வாட்டர் மற்றும் டாடா குளுக்கோ+ போன்ற பிராண்டுகளுடன் விற்பனை செய்கிறது. இந்நிலையில் டாடா கெமிக்கல்ஸின் வணிகத்தை டாடா குளோபல் பெவரேஜஸ் உடன் இணைத்த பிறகு உருவாக்கப்பட்ட TCPL மூலம் எஃப்எம்சிஜி பிரிவில் காலுன்றுவதற்காக டாடா குழுமம் இந்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதாவது 2021 நிதியாண்டில் இந்திய பாட்டில் தண்ணீர் சந்தையின் மதிப்பு 2.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சந்தை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான டெக் செய் ஆராய்ச்சியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவடைந்தால், அது டாடா குழுமத்தின் எஃப்எம்சிஜி நிறுவனத்திற்கு வேகமாக வளர்ந்து வரும் பாட்டில் வாட்டர் பிரிவில் பெரிய லாபம் கிடைக்கும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேசமயம் கோகோ கோலா இந்தியா உட்பட பல நிறுவனங்கள் அதன் பிராண்டான கின்லே, பெப்சிகோவின் அக்வாஃபினா, பார்லே அக்ரோவிலிருந்து பெய்லி மற்றும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இன் ரயில் நீர் ஆகியவை இப்பிரிவில் போட்டியிடுகின்றன.