இந்தியாவில், 2022 ஆம் ஆண்டின் வாகன விற்பனையில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. JATO அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் வாகனத் துறையில் முன்னணியில் உள்ளன. மேலும், தென் கொரியாவின் ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் வாகன விற்பனையை விட அதிகரித்துள்ளன. டாடா நிறுவன வாகன விற்பனை முதலிடத்தில் உள்ளது. டாடா நிறுவனம், நடப்பு ஆண்டின் முதல் 11 மாதங்களில், 326354 எஸ்யூவிக்கள் விற்பனை செய்துள்ளது. டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் கூட்டாக 628970 வாகனங்களும், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் கூட்டாக 450102 வாகனங்களும் விற்பனை செய்துள்ளன. எனவே, டாடா - மகேந்திரா வாகன விற்பனை 67 சதவீதமும், ஹூண்டாய் - கியா வாகன விற்பனை 5 சதவீதமும் உயர்ந்து பதிவாகியுள்ளன.