எலெக்ட்ரிக் தயாரிப்புகளுக்கான மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகி வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய வாகனங்கள் தயாரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், பிக்-அப்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றில் முன்னணி தயாரிப்பாளராக உள்ளது. இந்நிலையில்
டாடா மோட்டார்ஸ் அதன் பிக்கப் பிரிவில் யோதா 2.0, இன்ட்ரா வி20 பை-ஃப்யூயல் மற்றும் இன்ட்ரா வி50 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அந்த விழாவில் பேசிய டாடா மோட்டார்ஸ் -ன் நிர்வாக தலைவர் கிரிஷ் வாக் ௯றியதாவது, நிறுவனமானது CNG உள்ளிட்ட மாற்று எரிபொருள்களால் இயக்கப்படும் வாகனங்களை தயாரிப்பதன் மூலம் மின்சார இயக்கத்திலி௫ந்து மாறுவதற்கு முயற்சிப்பதாக ௯றினார். மேலும் புதிய வாகனங்கள் தயாரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ௯றினார். இந்த மாற்றமானது பூஜ்ஜிய மாசு உமிழ்வுக்காக என்று ௯றினார். மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, 1டன் எடை கொண்ட, 1000 கி.மீ வரை செல்லக்௯டிய CNG ல் இயங்கும் கனரக வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் ௯றினார். அதுமட்டுமின்றி நிறுவனம் ஏற்கனவே Tata Ace EV உற்பத்தியைத் தொடங்கிவிட்டது என்றும் அடுத்த மாதம் டெலிவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ௯றினார்.