டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஓராண்டு உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தது. குறிப்பாக, ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகன விற்பனையில் உச்சகட்ட வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. இந்த செய்தி வெளியான பின்னர், நேற்று, டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்தன. நேற்றைய தினத்தில், டாடா மோட்டார்ஸ் ஒரு பங்கு விலை 665 ரூபாயாக இருந்தது.
தொடர்ந்து, பயணிகள் வாகன துறையில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டும் என்று கருதப்படுகிறது. மேலும், மின்சார வாகன துறையிலும், டாடா மோட்டார்ஸ் கணிசமான இருப்பை பதிவு செய்து வருகிறது. எனவே, இனி வரும் வாரங்களிலும், டாடா மோட்டார்ஸ் உயர்வை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.