வரும் ஜனவரி மாதம் முதல், சரக்கு வாகனங்களின் விலையை 2% வரை உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாடல் வாகனத்திற்கும் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பயணிகள் வாகனங்கள் விலைகள் ஜனவரி மாதம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இந்நிலையில், சரக்கு வாகனங்களுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், வரும் ஏப்ரல் மாதம் முதல், வாகன வெளியேற்றங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே, இந்த விலை உயர்வு ‘காலத்தின் கட்டாயம்’ என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வர்த்தகப் பிரிவின் நிர்வாக அதிகாரி சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.














