வரும் ஜூலை 1ம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தக வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறது. கிட்டத்தட்ட 2% அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் வெவ்வேறு விகிதங்களில் விலைகள் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன விலைகள் 2% அளவுக்கு உயர்த்தப்பட்டன. தற்போது, மீண்டும் ஜூலை மாதத்தில் 2% உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் காரணமாக வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.