மே 1 முதல் பயணிகள் வாகனங்கள் விலை உயர்வு - டாடா மோட்டார்ஸ்

April 15, 2023

வரும் மே ஒன்றாம் தேதி முதல், தனது பயணிகள் வாகனங்களின் விலைகளை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விலையில் இருந்து, சராசரியாக, 0.6% வரை விலைகளை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளது. உற்பத்தி செலவு உயர்ந்து வரும் காரணத்தினால், இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மாருதி, ஹூண்டாய், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் வாகன விலையை உயர்த்தி உள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. […]

வரும் மே ஒன்றாம் தேதி முதல், தனது பயணிகள் வாகனங்களின் விலைகளை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விலையில் இருந்து, சராசரியாக, 0.6% வரை விலைகளை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளது. உற்பத்தி செலவு உயர்ந்து வரும் காரணத்தினால், இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, மாருதி, ஹூண்டாய், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் வாகன விலையை உயர்த்தி உள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. ஒவ்வொரு கார் மாடலுக்கும் விலை ஏற்றத்தில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ், பஞ்ச், சபாரி, ஹேரியர், நெக்ஸான் போன்ற கார் மாடல்களின் விலைகள் உயர்த்தப்படும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu