பாகுவில் நடைபெற்ற COP29 காலநிலை மாநாட்டில், ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) இணைந்து சுத்தமான எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா பவர் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், 966 மெகாவாட் சூரிய-காற்று அமைப்பு மற்றும் நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு $4.25 பில்லியன் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டாடா பவரின் பங்கு மதிப்பு 1.7% உயர்ந்துள்ளது. காலை 10:45 மணி நிலவரப்படி, ஒரு பங்கின் மதிப்பு ₹411 ஆகவும், மொத்த சந்தை மதிப்பு ₹1,31,328.46 கோடியாகவும் உள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய பெரிதும் உதவும் என டாடா பவர் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார்.