டாடா நிறுவனத்தின் வாகனங்களில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பை கொண்டது டாடா சியாரா ஆகும். இந்த வாகனம் மின்சார வாகனமாக மாற்றப்பட்டு மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வாகன கண்காட்சிகளில், டாடா சியாரா வாகனம் மின்சார வாகன வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட வாகனம் முழுமையான வடிவம் பெற்று இருந்தது. அதன்படி, வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் டாடா சியாராவின் மின்சார வாகன மாடல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அத்துடன், டாடா சியாராவின் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வாகனங்களையும் சந்தைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.