சொகுசு கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைவதாக டாடா டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் 7% உயர்ந்து வர்த்தகமாகின்றன. இன்றைய சந்தையில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1123.15 ரூபாயாக இருந்தது.
பிஎம்டபிள்யூ கார்களில் முக்கிய மென்பொருள் மேம்படுத்தலை கொண்டு வர டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ உடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் புதிய நிறுவனத்தில், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் 50% பங்களிப்பு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து இரு நிறுவனங்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.