ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி மையத்தை, டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 125 மில்லியன் டாலர்களுக்கு இந்த கையகப்படுத்தல் நடைபெற்றுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலையை டாடாவுக்கு கொடுப்பதற்கு, விஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாக டாடா குழுமம் வரலாறு படைக்க உள்ளது.தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவை கையகப்படுத்தியதற்கு, டாடா குழுமத்திற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள், டாடா குழுமம் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் என்றும், அவை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், டாடா குழுமம் சார்பில், கிட்டத்தட்ட 100 ஆப்பிள் விற்பனையகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.