டாடா டிரஸ்ட் தலைமை பொறுப்பில் சித்தார்த் ஷர்மா, அபர்ணா உப்பலூரி நியமனம்

January 25, 2023

டாடா டிரஸ்ட் தலைமை செயல் அதிகாரியாக சித்தார்த் ஷர்மா மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக அபர்ணா உப்பலூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்களது பதவிக்காலம் தொடங்கும் என்று நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. டாடா குழுமத்தை பொறுத்தவரை, 66% டாடா சன்ஸ் பங்குகள் டாடா டிரஸ்ட் வசம் உள்ளன. இந்த டிரஸ்ட் மூலமாக, டாடா குழுமம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு, புற்றுநோய் சிகிச்சை […]

டாடா டிரஸ்ட் தலைமை செயல் அதிகாரியாக சித்தார்த் ஷர்மா மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக அபர்ணா உப்பலூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்களது பதவிக்காலம் தொடங்கும் என்று நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

டாடா குழுமத்தை பொறுத்தவரை, 66% டாடா சன்ஸ் பங்குகள் டாடா டிரஸ்ட் வசம் உள்ளன. இந்த டிரஸ்ட் மூலமாக, டாடா குழுமம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு, புற்றுநோய் சிகிச்சை மற்றும் சுகாதாரம், கல்வி சார்ந்த சேவைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. எனவே, இதன் தலைமை பொறுப்பில் தகுதி வாய்ந்த அனுபவ சாலிகள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், 20 ஆண்டுகளாக அரசுப் பணியில் ஈடுபட்டிருந்த சித்தார்த்
க்ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தியாவின் 13 மற்றும் 14ம் அதிபர்களுக்கு நிதி ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த துறையில் அபர்ணா உப்பலூரி அதிக அனுபவம் வாய்ந்தவர். அத்துடன், அவர் ஃபோர்ட் பவுண்டேஷனில் 20 வருடங்களாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu