மின்சார வாடகை வாகனங்கள் வழங்குவதாக 'டாடா - ஊபர்' ஒப்பந்தம் செய்துள்ளது.
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'எக்ஸ்பிரஸ் - டி' எனும் மின்சார 'செடான்' காரை, வாடகை கார் வணிக நிறுவனமான 'ஊபர்' நிறுவனத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டில்லி, சென்னை, மும்பை, கோல்கட்டா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவன சேவைகளை மின்சார வாகன மயமாக்குவதற்காக, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 25 ஆயிரம் கார்களை டாடா வழங்க உள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன புரட்சியை செய்து வரும் டாடா மோட்டார்ஸ், கிட்டத்தட்ட 50 ஆயிரம் மின்சார வாகனங்களை இதுவரை தயாரித்துள்ளது. மேலும், 2040க்குள் வாடகை கார் வணிகத்திற்கு 100 சதவீதம் பசுமையான கார்களை பயன்படுத்த ஊபர் நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.