புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50 வது கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், புற்றுநோய் சிகிச்சைக்குரிய டைனுடக்சிமேப் என்ற மருந்தை தனிநபர்கள் இறக்குமதி செய்யும் போது அதற்கு வரி விலக்கு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவு பொருட்கள், குளிர்பானங்களுக்கு வரி தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் போலி ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டுக்கு வரி விதிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.