போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் சிறைபிடிக்கப்பட்ட ஆம்னிகளில் வரி கட்டிய ஆம்னிகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் ஏற்பட்ட புகாரில் சுமார் 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. இதில் வரி கட்டிய பேருந்துகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவிற்கு ஆணி பேருந்து உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேபோல் வெளி மாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளும் இரண்டு மாதங்களுக்குள் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.