டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், தனது 70% பணியாளர்களுக்கு 20% ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்த சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், எஞ்சியுள்ள 30% பணியாளர்கள் செயல்திறன் அடிப்படைலான ஊக்கத்தொகையை பெறுவர் என்று டிசிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு மூலம், சுமார் 6 லட்சம் டிசிஎஸ் பணியாளர்களில் 4 லட்சம் பேர் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 70% பணியாளர்களுக்கு 100% வேரியபிள் பே, மற்றவர்களுக்கு 10 - 20% வேரியபிள் பே கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 10431 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்து, ஒரு காலாண்டில் 10000 கோடி இலக்கை முதன் முறையாக டிசிஎஸ் நிறுவனம் கடந்தது. மேலும், வருடாந்திர அடிப்படையில் 8.4% வருவாய் உயர்வை பதிவு செய்தது. அதே வேளையில், நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 21.5% ஆக உயர்ந்தது. எனவே, இவற்றின் அடிப்படையில், ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.