டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான கணபதி சுப்ரமணியம் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
டாடா கன்சல்டன்சிஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த இயக்க அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான திரு.என். கணபதி சுப்ரமணியத்தின் பதவிக்காலம் மே 19ஆம் தேதி உடன் நிறைவு பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கணபதி சுப்ரமணியத்திற்கு மாற்று அதிகாரியை நேரடியாக நியமிக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தது. மேலும் இவர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவரின் பணிக்கு ஈடாக வேறொரு அதிகாரியை நியமிக்க முடியாது. அதனால் எங்களது தலைமை குழுவினர் ஒன்று கூடி அவர் மேற்கொண்டு வந்த பணிகளை பகிர்ந்து அளிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் புதிதாக தலைமை இயக்க அதிகாரி நியமிக்க விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது