இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்திற்கு, 1166 கோடி ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அமெரிக்காவின் எபிக் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், டிசிஎஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுத்து இருந்தது. காபிரைட்ஸ் எனப்படும் அறிவுசார் சொத்துரிமை மீறல் குற்றத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது. “எங்கள் நிறுவனத்தின் தளத்திலிருந்து ஆவணங்களை பதிவிறக்கம் செய்து, ‘மெட் மந்த்ரா’ என்ற பெயரில், டிசிஎஸ் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான மென்பொருள் ஆகும். எனவே, எங்கள் அறிவுசார் சொத்துரிமையை பயன்படுத்தியதற்கான நஷ்ட ஈட்டை, டிசிஎஸ் நிறுவனம் வழங்க வேண்டும்” என எபிக் சிஸ்டம்ஸ் வழக்கு தொடுத்திருந்தது. இதனை விசாரித்து வந்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.