இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகளை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 8.7% உயர்ந்து, 11342 கோடி அளவில் பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 7.9% உயர்ந்து, 59692 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் இயக்க லாபம் 9.1% உயர்ந்து, 14483 கோடி அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனம் 1% வரை சரிந்து வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.