கடந்த வெள்ளிக்கிழமை, டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 3 ஆண்டுகளில் அதிகபட்ச எபிட்டா மார்ஜின் அளவை நிறுவனம் பதிவு செய்தது. குறிப்பாக, 13.2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தங்களை வென்றுள்ளதாக கூறியது. இந்த செய்திகளின் விளைவாக, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று உயர்ந்து வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாளில், கிட்டத்தட்ட 1.5% அளவுக்கு டிசிஎஸ் பங்கு மதிப்பு உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி, ஒரு பங்கு 4000 ரூபாய் அளவில் உள்ளது. இது 4500 வரை உயரக்கூடும் என பிரபல முகமை நிறுவனமான ஜே பி மோர்கன் கணித்துள்ளது. மேலும், டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு உயரங்களை எட்டும் என்று கூறியுள்ளது. இந்த செய்தி முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.