டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றன. மேலும், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயை முதல் முறையாக தாண்டி உள்ளது.
ஐரோப்பிய வர்த்தகத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது, டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகவும் சாதகமானதாக பார்க்கப்படுகிறது. அதனை அடுத்து, நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இன்றைய தினம், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 4% அளவுக்கு மேல் உயர்ந்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளில், டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 4135.9 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.