முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தயாரிப்பில் மாற்றம் வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்கான தேர்வு முற்பகலில் செப்டம்பர் 28ம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வும் நடைபெற உள்ளதால், தேர்வர்கள் ஒரே நாளில் இரு தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பதால், இந்த தேர்வு அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.