இந்திய பாராளுமன்றத்தில் இன்று மக்களவையில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் மீது 2001 இல் நடைபெற்ற தாக்குதல் தடுக்கப்பட்டு அதன் 22 ஆவது வருட நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் மக்களவையில் அலுவல் நடைபெற்றது. அப்போது திடீரென இரண்டு பேர் கூச்சலிட்டு அத்துமீறி உறுப்பினர்கள் அமைந்திருக்கும் இடத்தில் குதித்தனர். மேலும் அவர்கள் கைகளில் இருந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அவையில் இருந்த உறுப்பினர்கள் அச்சத்துடன் வெளியேறினர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் தெரிவித்திருக்கிறார். இவர்களின் சில உறுப்பினர்கள் பிடித்து பாதுகாவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.