இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், தொழில்நுட்பத் துறை சார்ந்து மிகுந்த கவனம் பெற்றுள்ளது. காகிதம் இல்லா முறையில், இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் பட்ஜெட் விவரங்களை அறிந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. அவற்றில் சில:
1. ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்புகள், தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்களின் விலைகள் குறைப்பு.
2. அரசாங்கம் சார்பில், இளைஞர்களுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படவுள்ளது. இதனால், பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பல்வேறு பொறியியல் கல்லூரிகளில், கிட்டத்தட்ட 100 5ஜி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் ரூம் உள்ளிட்ட பல அம்சங்கள் மூலமாக கற்றல் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. டிஜிட்டல் எபிகிராபி மியூசியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.