கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இன்டெல், ஐபிஎம், சிஸ்கோ போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 27,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. மேலும், 2024-ம் ஆண்டில் மட்டும் 136,000 தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.
முக்கிய பணி நீக்கங்கள்
இன்டெல்: 2020-ல் இருந்து $24 பில்லியன் வருவாய் வீழ்ச்சியை சந்தித்ததால், செலவுகளைக் குறைக்கும் முயற்சியாக 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
சிஸ்கோ சிஸ்டம்ஸ்: AI மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் நோக்கில் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
ஐபிஎம்: R&D செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதால் சீனாவில் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
Infineon: 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்து, 1,400 பேரை குறைந்த செலவுள்ள நாடுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளது.
GoPro: மொத்த பணியாளர்களில் 15% (140 பேரை) பணி நீக்கம் செய்துள்ளது.
ஆப்பிள்: சேவை குழுவில் 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
டெல்: மொத்த பணியாளர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை 12,500 அளவில் இருக்கக்கூடும்.